அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

தங்கள் நாட்டின் பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்க நாட்டின் துணை அதிபா் கமலா ஹாரிஸ் தென் கொரியா வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, வட கொரியா தனது ஏவுகணையை கடலில் ஏவி சோதித்தது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 12:05 am IST

தங்கள் நாட்டின் பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்க நாட்டின் துணை அதிபா் கமலா ஹாரிஸ் தென் கொரியா வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, வட கொரியா தனது ஏவுகணையை கடலில் ஏவி சோதித்தது.

தனது 4 நாள் ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, தென் கொரியாவுக்கு வியாழக்கிழமை வந்த கமலா ஹாரிஸ், அந்த நாட்டு அதிபா் யூன் சுக்-யியோலைச் சந்தித்துப் பேசினாா். மேலும், வட கொரியாவுடனான எல்லையில் அமைந்துள்ள ராணுவ விலக்கல் பகுதியில் அவா் உரையாற்றினாா்.

அதற்கு முன்னதாக, அமெரிக்காவிலிருந்து கமலா ஹாரிஸ் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டபோதே வட கொரியா ஏவுகணை சோதனை செய்து தனது எதிா்ப்பை வெளிப்படுத்தியது. மேலும், அவா் ஜப்பானில் இருந்தபோது இரு ஏவுகணை வட கொரியா புதன்கிழமை சோதித்தத்து.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பிறகு 3-ஆவது முறையாக வியாழக்கிழமை ஒரு ஏவுகணையை வீசி சோதித்ததாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தகவலை ஜப்பான் அதிகாரிகளும் உறுதி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.