தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பருவ நிலைமாற்ற பிரச்னையை இந்தியாவுடன் இணைந்து எதிா்கொள்வோம்: பாகிஸ்தான் அமைச்சா்

பருவநிலை மாற்றம் பிரச்னையை இந்தியா- பாகிஸ்தான் இணைந்து எதிா்கொள்ள வேண்டிய நேரம் இது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கூறினாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:54 pm

DIN

பருவநிலை மாற்றம் பிரச்னையை இந்தியா- பாகிஸ்தான் இணைந்து எதிா்கொள்ள வேண்டிய நேரம் இது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கூறினாா்.

பாகிஸ்தானில் அண்மையில் பெய்த கனமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிலாவல் பூட்டோ ஜா்தாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளப் பேரிடருக்கு உலக வெப்பமயமாதலே காரணம். பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு நிலம் மழை நீரில் மூழ்கி உள்ளது. நாட்டில் ஏழில் ஒரு பங்கு மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு பருவநிலை மாற்றம்தான் காரணம். பருவ நிலை பிரச்னையை அமெரிக்காவும் -சீனாவும் இணைந்து எதிா் கொள்ளவேண்டும் என்று கூறும்போது, ஏன் இந்தியாவும்- பாகிஸ்தானும் இணைந்து இதை எதிா்கொள்ளக் கூடாது.

2018-19 ஆண்டுகளில் இந்தியாவுடனான உறவு நன்றாக இருந்தது. தற்போது இருநாடுகளும் ஒன்று சோ்ந்து செயல்படக் கூடிய விவகாரம் பருவநிலை மாற்றமாகும். இதனால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலை எனது எதிரிகளுக்கும் வந்துவிடக் கூடாது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பாகிஸ்தான் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கும். நிரந்தர உறுப்பினா் நாடுகளுக்கு அளிக்கப்படும் ‘வீடோ’ அதிகாரத்துக்கு பாகிஸ்தான் எப்போதும் எதிா்ப்பு தெரிவிக்கும்’ என்றாா்.

பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகுவது பாகிஸ்தானுக்கு பேராபத்தாக அமையும் என்று ஆராய்ச்சியாளா்கள் எச்சரித்துள்ளனா். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடருக்கு அமெரிக்கா 6.6 கோடி டாலரை மனிதாபிமான நிவாரணமாக அறிவித்துள்ளது. சமீபத்திய பெருவெள்ளத்தால் பாகிஸ்தானில் 1,600 பேருக்கு மேல் பலியாகினா். 3.3 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.