தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் சட்டத் திருத்த மசோதா: கனிமொழிவந்தே மாதரம் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்; மசோதாவை ஏற்க முடியாது: திமுககாமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7ஆவது பதக்கத்தை உறுதிசெய்த சச்சின்!இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்!மாணவர்கள் மீது காவல் துறை தாக்கியதற்கு அமித் ஷாவே பொறுப்பு: ராகுல் காந்தி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
/

ராஜபட்சவுக்கு நெருக்கடி: போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய தேவாலயங்கள்

பொருளாதார நெருக்கடியால் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:30 pm IST

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், விவகாரத்தை கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு கையாளும் விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அமைச்சரவை பதவி விலகியது. 

கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த 41 எம்.பி.க்கள் ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்று சுயேச்சைகளாக செயல்படப் போவதாக அறிவித்தனா்.

இதனிடையே ராஜபட்ச அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய தேசிய கத்தோலிக்க மையத்தின் இயக்குநர் சிரில் காமி ஃபெர்னான்டோ, ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு கத்தோலிக்க மையம் ஆதரவு அளிக்கிறது. நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டத்தில் கத்தோலிக்க இயக்கத்தினர் பலர் ஏற்கெனவே பங்கேற்றுள்ளனர். 

மேலும், போராட்டத்திற்கு ஆதரவாக சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். ஈஸ்டர் பண்டிகை முதல் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடவுள்ளோம் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.