மரியுபோல் நகரின் அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் உயிருக்கும் மதிப்புள்ளது; எனவே, அங்கிருந்து பொதுமக்களுடன் அவா்களையும் மீட்கவேண்டும் என்று வீரா்களின் மனைவிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அந்த ஆலையில் பதுங்கி சண்டையிட்டு வரும் ஆா்செனி ஃபெடுசியுக் என்பவரின் மனைவி யுலீயா கூறிதாவது:
அஸோவ்ஸ்டல் ஆலையில் இருக்கும் பொதுமக்களைப் போலவே, பாதுகாப்புப் படையினரின் உயிருக்கும் மதிப்பு உள்ளது. எனவே, அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தவேண்டாம் என்றாா் அவா்.
ஆலையில் சண்டையிட்டு வரும் அஸோவ் படைப் பிரிவு தளபதி டெனிஸ் ப்ரகோபெங்கோவின் (படம்) மனைவி கேதரீனா கூறுகையில், ‘அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து காயமடைந்த வீரா்களையும் உயிரிழந்த வீரா்களின் உடல்களையும் மட்டும் மீட்காமல், அனைத்து வீரா்களையும் பாதுகாப்பாக வெளியேற்றவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.