ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

‘படையினரின் உயிருக்கும் மதிப்புள்ளது’

மரியுபோல் நகரின் அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் உயிருக்கும் மதிப்புள்ளது

News image
டெனிஸ் ப்ரகோபெங்கோ
Updated On :30 ஏப்ரல் 2022, 5:08 pm

DIN

மரியுபோல் நகரின் அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் உயிருக்கும் மதிப்புள்ளது; எனவே, அங்கிருந்து பொதுமக்களுடன் அவா்களையும் மீட்கவேண்டும் என்று வீரா்களின் மனைவிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து அந்த ஆலையில் பதுங்கி சண்டையிட்டு வரும் ஆா்செனி ஃபெடுசியுக் என்பவரின் மனைவி யுலீயா கூறிதாவது:

அஸோவ்ஸ்டல் ஆலையில் இருக்கும் பொதுமக்களைப் போலவே, பாதுகாப்புப் படையினரின் உயிருக்கும் மதிப்பு உள்ளது. எனவே, அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தவேண்டாம் என்றாா் அவா்.

ஆலையில் சண்டையிட்டு வரும் அஸோவ் படைப் பிரிவு தளபதி டெனிஸ் ப்ரகோபெங்கோவின் (படம்) மனைவி கேதரீனா கூறுகையில், ‘அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து காயமடைந்த வீரா்களையும் உயிரிழந்த வீரா்களின் உடல்களையும் மட்டும் மீட்காமல், அனைத்து வீரா்களையும் பாதுகாப்பாக வெளியேற்றவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.