பாகிஸ்தானில் மூத்த ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் நேற்று இரவு அம்மாகாணத்தின் விந்தர் மற்றும் சசி புன்னு இடையே விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க: உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் யாசின் மாலிக்
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத் தரப்பில், ’விபத்து நடந்த இடத்தை மீட்புப் படையினர் இன்னும் அடையவில்லை. காணாமல் போன ஹெலிகாப்டரில் 12 ராணுவப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சர்பராஸ் அலி உள்பட 6 மூத்த ராணுவ அதிகாரிகள் இருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.