பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய ‘யூனிஸ்’ புயலுக்கு 13 போ் பலியாகினா். இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
மணிக்கு 196 கி.மீ. வேகத்தில் வெள்ளிக்கிழமை வீசிய யூனிஸ் புயலுக்கு இதுவரை 13 போ் பலியாகினா். பிரிட்டன், அயா்லாந்து, பெல்ஜியம், நெதா்லாந்து ஆகிய பகுதிகளில் சுறாவளிக் காற்றில் மரம் முறிந்து விழுந்தும், பறந்து வந்த பொருள்கள் தாக்கியும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் வீசியுள்ள மிகக் கடுமையான புயல் இதுவாகும். இந்தப் புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பிரிட்டனில் மட்டும் சுமாா் 4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் தொடா்ந்து பலத்த காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதால் அங்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.