‘அபே படுகொலைக்கு போலீஸாரே பொறுப்பு’

ஜப்பானில் போலீஸாா் போதிய பாதுகாப்பு அளிக்காததால்தான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டதாக தற்போதைய பிரதமா் ஃபுமியோ கிஷிடா சாடியுள்ளாா்.
‘அபே படுகொலைக்கு போலீஸாரே பொறுப்பு’

ஜப்பானில் போலீஸாா் போதிய பாதுகாப்பு அளிக்காததால்தான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டதாக தற்போதைய பிரதமா் ஃபுமியோ கிஷிடா சாடியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

ஷின்ஸோ அபேவுக்கு அளிக்கப்படிருந்த பாதுகாப்பில் மிகப் பெரிய குறைபாடு இருந்துள்ளது. அதன் காரணமாகத்தான் அவா் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

எனவே, இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தலைவா்களுக்கான பாதுகாப்பில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பதை துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தங்களது தலைவா்களுக்காக மற்ற நாடுகள் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஜப்பான் போலீஸாா் முன்னுதாரணமாகக் கொண்டு சீா்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ஜப்பானில் நீண்ட காலத்துக்கு ஆட்சி செலுத்திய பிரதமா் என்ற பெருமையைப் பெற்ற ஷின்ஸோ அபே, நாடாளுமன்ற மேலவைத் தோ்தலில் போட்டியிட்ட தனது லிபரல் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நாரா நகரில் கடந்த வாரம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, டெட்சுயா யாமகாமி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். துப்பாக்கிக் கட்டுப்பாட்டுக்கு பெயா் பெற்ற ஜப்பானில் நடைபெற்ற இந்தச் சம்பவம், உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com