/

இலங்கை அதிபர் அலுவலகம் மீண்டும் திறப்பு!

போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து இலங்கை அதிபர் அலுவலகம் இன்று திறக்கப்பட உள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:53 am

DIN

போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து இலங்கை அதிபர் அலுவலகம் இன்று திறக்கப்பட உள்ளது.

போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அதிபர் அலுவலகம் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அதிபர் அலுவலகத்தில் சேதமடைந்த பொருள்களின் விவரங்களை தடவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மீண்டும் அதிபர் அலுவலகம் செயல்பாட்டுக்காக திறக்கப்படுகிறது.

போராட்டக்காரர்கள் வசம் சென்ற மற்ற அலுவலக கட்டிடங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்ட அதிபா் மாளிகை, பிரதமரின் அதிகாரபூா்வ இல்லங்களில் இருந்து தொல்லியல் முக்கியத்துவம், மதிப்புமிக்க 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைப் பொருள்கள் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அதிபர் அலுவலகம் இன்று திறக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.