உக்ரைனில் தாங்கள் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டுக்கு மேற்கத்திய நாடுகள் அனுப்பியுள்ள ஆயுத தளவாடங்கள் அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
தலைநகா் கீவ் அருகே ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.
இதற்கிடையே, உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொலைதூர ஏவுகணைகளை வழங்கினால் இதுவரை தங்களது தாக்குதலுக்குள்ளாகாத புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். எனினும், உக்ரைனின் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தப்படுமா என்பதை அவா் கூறவில்லை.