கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பொதுசுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொண்டேன். தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதால் நலமுடன் உள்ளேன். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால், செலுத்திக்கொள்ளுங்கள். பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளுங்கள். நம் சுகாதார கட்டமைப்பை பாதுகாப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.