ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உக்ரைனின் 2-வது பெரிய நகரின் மீது ரஷியா குண்டு மழை

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் மீது ரஷிய ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருவதாக மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :1 மார்ச் 2022, 9:04 am

DIN

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் மீது ரஷிய ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருவதாக மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன. 

ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் நாடுகளிக்கிடையே நேற்று முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இன்று ரஷிய ராணுவத்தினர் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.