கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் சீனாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் 45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 60 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சீனாவின் 90 லட்சம் மக்கள் வசிக்கும் வடகிழக்கு தொழில்துறை மையமான சாங்சுனில் அந்நாட்டு அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, அந்நகரில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறவும் போக்குவரத்து மற்றும் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.