நியூசிலாந்து அரசு கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்திவந்த நிலையில் நாட்டின் எல்லைகளை தற்போது முழுவதுமாக திறந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதிகளை மூடி உத்தரவிட்டன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியூசிலாந்து அரசு தங்கள் நாட்டு எல்லைகளை மூடியது.
இதையும் படிக்க | கோடீஸ்வர கருமியாக வாழும் பெண்: விவாகரத்து செய்த கணவர் சொன்ன பதில்
கரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் நியூசிலாந்தில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் தங்களது எல்லைப் பகுதிகளை அந்நாட்டு அரசு திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வெளியிட்டார்.
சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற நியூசிலாந்து நாட்டில் ஆண்டுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். ஏற்கெனவே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னா் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட 60-க்கு மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

காங்கிரசில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்... | Krithika Tharan | Congress | Rahul | TN Election 2026 | Selvaperunthagai

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


