ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நஹ்யான் வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் விவகாரத் துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
2004ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் இருந்து வந்தார். உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக கருதப்பட்டார் ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான்.
இதையும் படிக்க.. குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய காத்திருப்பவரா? அருமையான வாய்ப்பு
ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாள்கள் துக்கும் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அத்தும் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.