வட கொரியா: 20 லட்சத்தைக் கடந்த கரோனா பாணி காய்ச்சல்

வட கொரியாவில் கரோனா அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
வட கொரியா: 20 லட்சத்தைக் கடந்த கரோனா பாணி காய்ச்சல்

சியோல்: வட கொரியாவில் கரோனா அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,62,270 பேருக்கு கரோனாவைப் போன்ற காய்ச்சல் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அத்தகைய அறிகுறிகள் கண்டறியப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுதவிர, கரோனாவைப் போன்ற காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதையடுத்து, நாட்டில் அத்தகைய காய்ச்சலால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com