அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியது.
தற்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டொனால்டு டிரம்பை ட்விட்டரில் சேர்ப்பது குறித்து எலான் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார்
இதில் பெரும்பலானோர் சேர்க்கலாம் என்று பதிவிட்ட நிலையில், டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.
ஜனவரி 6, 2021-ல் விதிமுறைகளை மீறியதாக அமெரிக்க அதிரபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கி வைக்கப்பட்டது.
இதையும் படிக்க: 'காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது': வானிலை ஆய்வு மையம்
வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினார் என்று குற்றம் சாட்டி அமெரிக்க அதிரபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.