வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய அதிபரை கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளிடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்துவருகிறது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட ராணுவப் பயிற்சி இந்த சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் தென்கொரிய அதிபரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க | வசூலைக் குவிக்கும் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே..’
அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு நடந்துவரும் தென்கொரிய அதிபர் ஒரு முட்டாள் என விமர்சித்துள்ள அவர் அமெரிக்கா வீசும் எலும்புத் துண்டுகளுக்காக அவர் குரைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியா மீதான புதிய பொருளாதார தடைகள் குறித்த தென்கொரியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அவர் முட்டாள்கள் தொடர்ந்து அபாயமான சூழலை ஏற்படுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். கடந்த சில தினங்களாக வடகொரியா நடத்திவந்த ஏவுகணை சோதனைகளை கண்டிக்கும் விதமாக புதிய தடைகளை தென்கொரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.