ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம், உலகிலேயே மிக நீண்ட பயணிகள் ரயிலை இயக்கி சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது.
ஆல்ப்ஸ் மலை நோக்கி சனிக்கிழமைகளில் இயக்கப்படும் பயணிகள் ரயிலை, மிக நீளமான ரயிலாக இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம், 1.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 100 பெட்டிகளுடன், 4 எஞ்ஜின்களால் இயக்கப்படும் மிக நீளமான ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க.. சென்னைக்கு சம்பவம் காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
பிரெடா முதல் அல்புலா / பெர்னினா வழியாக பெர்குவென் நோக்கிச் செல்லும் ரயிலைத்தான் மிக நீளமான ரயிலாக இயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் வழிப்பாதை, 2008ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவால் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டு இயக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் 22 சுரங்கப்பாதைகள் அமைந்துள்ளன. மலைப் பகுதியைச் சுற்றி, 48 பாலங்களைத்த தாண்டி இந்த ரயில் சென்று வரும். ஒட்டுமொத்தமாக 25 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த பயணத்தை நிறைவு செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடக்கு கேரளத்தில் கனமழை! 24 மணி நேரத்தில் 121 மி.மீ. மழை

இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா? உதயநிதியை விமர்சித்த அண்ணாமலை!

இன்று தங்கம் வாங்கலாமா? ஆக. 4 விலை நிலவரம்!

உதயநிதியின் இழிவான பேச்சு: தவெக அமைச்சர்கள் கடும் கண்டனம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



