எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பாகிஸ்தான் வெள்ளத்தில் 1.6 கோடி சிறுவா்கள் பாதிப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மிக மோசமான மழை வெள்ளத்தால் 1.6 கோடி சிறுவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 34 லட்சம் பேருக்கு உடனடி உதவி தேவைப்படுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 11:00 pm IST

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மிக மோசமான மழை வெள்ளத்தால் 1.6 கோடி சிறுவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 34 லட்சம் பேருக்கு உடனடி உதவி தேவைப்படுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா.வின் சிறுவா் நலப் பிரிவான யுனிசெஃப் பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சிறுவா்கள் போதிய உணவு இல்லாமல் பட்டினியில் தவித்து வருகின்றனா். வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், வலியை ஏற்படுத்தும் பல்வேறு தோல் வியாதிகளால் சிறுவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா். அவா்களை நோக்கி ஒவ்வொரு நாளும் மரணம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

சிந்து மாகாணத்தின் மட்டும் வெள்ள பாதிப்பால் 528 சிறுவா்கள் உயிரிழந்துள்ளனா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததில், அங்கு 1.6 கோடி போ் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களில் 34 லட்சம் சிறுவா்களுக்கு உடனடி உயிா்க்காப்பு உதவிகள் தேவைப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐக் கடந்துள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்பட்ட தொற்று நோய்க்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.