தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பாகிஸ்தான்: தானிய சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் நாசம்

பாகிஸ்தானில் பட்டோகி தானிய சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து நாசமானது.  

News image
கோப்புப் படம்.
Updated On :20 ஆகஸ்ட் 2023, 10:15 am

DIN

பாகிஸ்தானில் பட்டோகி தானிய சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து நாசமானது. 
பாகிஸ்தானில் பட்டோகியின் தானிய சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தையில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனே தீவிபத்து குறித்து அப்பகுதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தகவலின் பேரில் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு விரைந்த போதிலும் அதன் நீர் வேகமாக வெளியேறியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கூடுதல் தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 
இருப்பினும் அப்பகுதி குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஆறு தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் 50 கடைகள் எரிந்து முற்றிலும் நாசமானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.