வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6-ஆகப் பதிவு

வங்கதேசத்தில் சனிக்கிழமை காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6-ஆகப் பதிவு

வங்கதேசத்தில் சனிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

வங்கதேசத்தில் சனிக்கிழமை காலை 9.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

இதனால் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில்  உணரப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பு அக்டோபர் 2-ஆம் தேதி 5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com