டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாக். : பொதுஇடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டம் - 14 பயங்கரவாதிகள் கைது!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகளின் சதி முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

DIN

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களில், குண்டுவெடிப்பு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், பயங்கரவாதிகளின் சதி முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   

பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா, பஹவல்பூர், சாஹிவால், பைசலாபாத், சர்கோதா மற்றும் லாகூர் உள்பட 147 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய  பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர், டிடிபி மற்றும் ஐஎஸ்ஐ  உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 14 பயங்கரவாதிகள் கைது செய்தனர்.  

அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பஞ்சாப் மாவட்டத்தின் பல முக்கிய இடங்களை  குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் தொடர்ந்து  தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.