மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை?

ஹமாஸ் அமைப்பு அழிந்துவருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறிவந்த நிலையில் பாலஸ்தீன போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

News image

ரஃபா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி

Updated On :14 டிசம்பர் 2023, 7:06 am

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மூன்றாவது மாதத்தைத் தொட்டுள்ள நிலையில், பாலஸ்தீன போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு செயலிழந்துவிட்டதாகவும், ஹமாஸ் போராளிகள் சரணடைந்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவந்த நிலையில், பாலஸ்தீனப் போராளிகள் நடத்திய இந்தத் தாக்குதல் ஹமாஸ் அமைப்பு இன்னும் செயலிழக்கவில்லை என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

இரண்டு மாதகாலமாக நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களால் காஸாவில் 18,600க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான இடமாக இஸ்ரேல் கூறிய தெற்குப் பகுதிகளும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளன.

பாதுகாப்பான இடம் என எதுவும் இல்லாத நிலையில் லட்சக்கனக்கான மக்கள் பசியுடனும், காயங்களுடனும், நோய்கள் எளிதாக பரவிவரும் சூழலிலும் துன்புற்றுவருகின்றனர். 

சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துமாறு இஸ்ரேலை அறிவுருத்திவருகின்றன. எனினும், எந்தக் காரணத்தைக் கொண்டும் போரை நிறுத்துவதாக இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.