சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸாவில் பலியாகும் இஸ்ரேல் பிணைக் கைதிகள்! உறவினர்கள் போராட்டம்!

இஸ்ரேலின் பயங்கர தாக்குதலால் காஸாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளும் பலியாகிக் கொண்டிருப்பதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
போராட்டத்தில் ஈடுபடும் பிணைக் கைதிகளின் உறவினர்கள் | AP
Updated On :17 டிசம்பர் 2023, 10:00 am

DIN

காஸாவில் ஹமாஸுடனான சண்டையின் போது மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளைத் தவறுதலாகக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தெல் அவிவில் பிணைக் கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களால் இஸ்ரேல் கைதிகளும் இறந்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதல்களை இன்றுவரை நிறுத்திக்கொள்ளவில்லை. 

சுட்டுக்கொள்ளப்பட்ட 3 இஸ்ரேல் பிணைக் கைதிகள், சட்டை அணியாமல் வெள்ளை நிறக் கொடியைக் கையில் ஏந்திவந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த சம்பவம் என் நெஞ்சயும், ஒட்டு மொத்த நாட்டின் நெஞ்சயும் உடைத்துவிட்டது எனவும் போரில் எங்கள் வீரியம் குறையாது எனவும் தெரிவித்துள்ளார். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்துகின்றனர்.

தெல் அவிவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய 19 வயது பிணைக்கைதியின் தந்தை, 'மக்களை உயிருடன் கொண்டு வருவதுதான் முக்கியமெனில், ஹமாஸுக்கு பெரிய சலுகை வழங்கி மீட்டு விடலாமே! எங்கள் உறவினர்களை உயிருடன் மீட்டுக் கொடுங்கள்' எனத் தெரிவித்துள்ளார். 

பிணைக் கைதிகளைக் காப்பாற்றாமல் போர் நிறுத்தம் இருக்காது என இஸ்ரேல் தெரிவித்துவரும் நிலையில், மூத்த ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்தான் போரை நிறுத்தி ஹமாஸின் நிபந்தனைகளை நிறைவேற்றாதவரை எந்தக் கைதியும் விடுதலை ஆக மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.