நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இணையத்தில் பரவிவரும் இன்ஸ்டாகிராமின் புதிய வசதி!

இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத புதிய வசதி தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிவருகின்றன. 

News image

இன்ஸ்டாகிராமின் புதிய வசதி தொடர்பாக பரவிவரும் புகைப்படம் | X

Updated On :31 டிசம்பர் 2023, 5:58 pm IST

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி தொடர்பான தகவல்கள் வலைதளத்தில் பரவி வருகின்றன. ஒருவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்பை (Profile) ஸ்டோரியில் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியில் மெட்டா இருப்பதாகக் கூறப்படுகிறது. 

பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு தங்களது ஆதரவினைத் தெரிவிக்க, தங்களது ஸ்டோரியில் அவர்களது முகப்பைப் பகிர இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். ஸ்டோரியில் பகிரப்படும்போது முகப்பில் அந்த பயனாளரின் மூன்று சமீபத்திய பதிவுகள் காட்டப்படும் எனவும் கூறப்படுகிறது. 

இன்ஸ்டாகிராம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வராத நிலையில், இந்த அம்சத்தின் விவரங்கள் எல்லாம் வலைதளத்தில் பகிரப்பட்டுவருகின்றன.

சமீபத்தில் சாம்சங், ஜிடிஏ (GTA) போன்ற நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.