பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இணையத்தில் பரவிவரும் இன்ஸ்டாகிராமின் புதிய வசதி!

இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத புதிய வசதி தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிவருகின்றன. 

இன்ஸ்டாகிராமின் புதிய வசதி தொடர்பாக பரவிவரும் புகைப்படம் | X

Published On :

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி தொடர்பான தகவல்கள் வலைதளத்தில் பரவி வருகின்றன. ஒருவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்பை (Profile) ஸ்டோரியில் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியில் மெட்டா இருப்பதாகக் கூறப்படுகிறது. 

பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு தங்களது ஆதரவினைத் தெரிவிக்க, தங்களது ஸ்டோரியில் அவர்களது முகப்பைப் பகிர இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். ஸ்டோரியில் பகிரப்படும்போது முகப்பில் அந்த பயனாளரின் மூன்று சமீபத்திய பதிவுகள் காட்டப்படும் எனவும் கூறப்படுகிறது. 

இன்ஸ்டாகிராம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வராத நிலையில், இந்த அம்சத்தின் விவரங்கள் எல்லாம் வலைதளத்தில் பகிரப்பட்டுவருகின்றன.

சமீபத்தில் சாம்சங், ஜிடிஏ (GTA) போன்ற நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.