

ஃபைசாபாத் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரிலிருந்து 135 கிமீ தெற்கே-தென்கிழக்கில் திங்கள்கிழமை காலை 6.47 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகலை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஃபைசாபாத் நகரில் பதற்றம் நிலவியது.
இதையும் படிக்க | துருக்கி நிலநடுக்கம்: கட்டட ஒப்பந்ததாரா்கள் கைது
ஒரு மாதத்திற்குள் நாட்டை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:04 மணிக்கு ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு தென்கிழக்கில் 79 கிமீ தொலைவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.