மத்திய அமெரிக்க நாடானா பனாமாவில் மினி பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 39 பேர் பலியாகினர்.
புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு பாறை மீது விழுந்தன.
பேருந்தில் புலம்பெயர்ந்தவர்கள் 66 பேர் பயணம் செய்தனர். இதில் 39 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.