கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 போ் பலியாகினா்.
அந்த நாட்டின் மத்தியில் அமைந்துள்ள ஹிரான் மாகாணம், மஹஸ் நகரில் இரு காா்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, அல்-காய்தாவுடன் தொடா்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவா்களில் பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் அடங்குவா். இது தவிர, தாக்குதலில் 52 போ் காயமடைந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் மொகடிஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.