தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 39 பேர் பலி!

பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 39 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :29 ஜனவரி 2023, 12:18 pm IST

பாகிஸ்தான்: பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 39 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு கிட்டத்தட்ட 48 பயணிகளுடன் பேருந்து  அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் லாஸ்பேலா அருகே பேருந்து திரும்பும் போது பாலத்தின் தூணில் மோதி, பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்தது.

ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.