ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அளவுக்கு அதிகமான தாகம் மூளைக்கட்டியின் அறிகுறியா?

அளவுக்கு அதிகமான தாக உணர்வுக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியே காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2023, 12:25 pm

DIN


பிரிட்டனைச் சேர்ந்த ஜோனதனுக்கு (41) அளவுக்கு அதிகமான தாக உணர்வு ஏற்பட்டிருந்ததன் பின்னணியில், அவரது மூளையில் ஏற்பட்ட கட்டியே காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமல், எப்போதுமே கடுமையான தாக உணர்வோடு தவித்து வந்துள்ளார் ஜோனதன். மருத்துவர்களை ஆலோசித்த போது, இது நீரிழிவின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்றார்கள்.

ஆனால் அதுவும் இல்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்த பிறகு, அவருக்கு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, மூளையில் பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகே இந்த கட்டி இருந்துள்ளது. இந்த பிட்யூட்டரி சுரப்பிதான், உடலுக்கு நீர்ச்சத்து தேவையா என்பதை கண்டறிந்து தாக உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகே இருந்த இந்தக் கட்டியால் இந்த சுரப்பி தாறுமாறாக வேலைசெய்ய ஆரம்பித்து, இவர் நாள்தோறும் 10 லிட்டர் தண்ணீர் குடிக்கக் காரணமாகியிருக்கிறது.

இவ்வளவு தண்ணீரையும் குடித்துவிட்டு பிறகு எப்படி நான் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று அவர் தனக்கு ஏற்பட்ட மிக மோசமான பிரச்னையை எடுத்துரைக்கிறார்.

பிறகு அவருக்கு தொடர்ந்து கண் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்யப்பட்டதில்தான் மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு 30 சுற்று ரேடியோ தெரப்பி மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டபிறகு கட்டி முற்றிலும் நீங்கிவிட்டதாகவும், ஆனால், ஸ்டீராய்டு மருந்துகளின் விளைவால் தனது உடல் அதிக எடை போட்டுவிட்டதாகவும், அதனைக் கட்டுப்படுத்த தற்போது பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை வெளி உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்றும், இதன் மூலம் மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் விசித்திரமான அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டாம், அதனை கவனித்து, அதற்கான காரணியை கண்டறிந்தால் மிகப் பயங்கர நோயையும் முதலிலேயே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம் என்பதே உலக மக்களுக்கு ஜோனதன் சொல்ல வரும் செய்தியாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.