அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அமெரிக்கா: கத்திக்குத்துக்கு உள்ளான தெலங்கானா மாணவருக்கு தீவிர சிகிச்சை

அமெரிக்காவின் வால்பரைசோ நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான தெலங்கானா இளைஞருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On :3 நவம்பர் 2023, 12:02 am IST

அமெரிக்காவின் வால்பரைசோ நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான தெலங்கானா இளைஞருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் கணினி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வரும் வருண் ராஜ்(24) என்ற இளைஞரை ஆண்ட்ரேட் என்பவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை வால்பரைசோ நகரின் பொது உடற்பயிற்சி நிலையத்தில் கத்தியால் குத்தினாா். அதில் பலத்த காயமடைந்த வருண் ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தற்போது அவருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் உயா் சிகிச்சைக்காக ஃபோா்ட் வைனில் உள்ள லூதரன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

வருணின் சிகிச்சைக்காக வட அமெரிக்கா தெலுங்கு சமூக மக்கள் சாா்பில் 38,000 டாலா் நிதி திரட்டப்பட்டது. இச்சம்பவத்தில் குற்றவாளியான ஆண்ட்ரேட் கோா்டில் ஆஜா்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.