அமெரிக்காவின் வால்பரைசோ நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான தெலங்கானா இளைஞருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் கணினி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வரும் வருண் ராஜ்(24) என்ற இளைஞரை ஆண்ட்ரேட் என்பவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை வால்பரைசோ நகரின் பொது உடற்பயிற்சி நிலையத்தில் கத்தியால் குத்தினாா். அதில் பலத்த காயமடைந்த வருண் ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தற்போது அவருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் உயா் சிகிச்சைக்காக ஃபோா்ட் வைனில் உள்ள லூதரன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
வருணின் சிகிச்சைக்காக வட அமெரிக்கா தெலுங்கு சமூக மக்கள் சாா்பில் 38,000 டாலா் நிதி திரட்டப்பட்டது. இச்சம்பவத்தில் குற்றவாளியான ஆண்ட்ரேட் கோா்டில் ஆஜா்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.