காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை, ஆனால்...: நெதன்யாகு!

காஸாவில் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பிரதமர் நெதன்யாகு இஸ்ரேலின் நோக்கத்தைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச ஊடகங்களிடம் பேசியபோது, காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காஸாவில் தினந்தோறும் நான்கு மணி நேரம் தாக்குதல் நிறுத்தத்தை பிரதமர் அறிவித்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக பேசிய நெதன்யாகு,  இஸ்ரேலிய ராணுவம் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்றும் பாலஸ்தீனத்தை மீண்டும் கைப்பற்றும் திட்டம் இஸ்ரேலிடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

“போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு ஒப்பானது. ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கான நேர அட்டவணை கிடையாது. இஸ்ரேல் ராணுவம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. எவ்வளவு நாள் எடுக்குமோ அது வரை நாங்கள் போரிடுவோம். காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை. நாங்கள் ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கவில்லை, காஸாவுக்கும் எங்களுக்கும் சிறந்த எதிர்காலம் அமைக்கவே எதிர்பார்க்கிறோம். காஸாவில் மக்கள் அரசை வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போரின் வெற்றிக்குப் பிறகு எப்போதும் காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் படை தயாராக இருக்கும் என்றும் அதுவே ஹமாஸ் போன்ற குழு மீண்டும் உருவாவதைத் தடுக்கும் எனவும் நெதன்யாகு குறிப்பிடுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாத குழுவை அடியோடு ஒழிக்கும் முயற்சியில் உள்ள இஸ்ரேல் காஸாவில் நடத்திய வான் வழி மற்றும் தரைவழி தாக்குதலில் 10,800 பாலஸ்தீனர்கள் இதுவரை பலியாகியுள்ளதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com