சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இறப்பு இன்னும் சில நிமிட தூரத்தில்...: காஸா மருத்துவமனை தாக்குதல்!

காஸாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகே தொடர் சண்டை நடந்து வருகிறது. 

News image
தாக்குதலில் குடும்பத்தாரை இழந்த குழந்தைகள்
Updated On :11 நவம்பர் 2023, 11:33 am

DIN

காஸாவின் பிரதான மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகேயும் மருத்துவமனை வளாகத்திலும் இஸ்ரேலின் தாக்குதல் நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.

1500-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் 1500 மருத்துவ குழுவினரும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்களும் மருத்துவமனையில் உள்ளனர். 

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியேறுபவர்கள் தாக்கப்படுவதாகவும் சுற்றிலும் இஸ்ரேலின் ட்ரோன்கள் பறந்தவண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே நீர், உணவும் எரிபொருள் இல்லாத நிலையில் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்டு விட்டது. அதனால் 5 பேர் இறந்துள்ளனர். குழந்தைகளுக்கான இன்குபேட்டர்கள் இயங்காததால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் இருளிலும் அச்சத்திலும் உறைந்திருப்பதாகவும் இறப்பு இன்னும் சில நிமிடங்களில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் இந்த மருத்துவமனை, ஹமாஸின் கட்டுபாட்டு அறையாகவும் புகலிடமாகவும் உள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது.

இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11,070 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.