அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஐரோப்பாவில் தங்கம் வென்றார்

இங்கிலாந்தில் வசிக்கும் 13 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஸ்வீடனில் நடைபெற்ற ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

News image
Updated On :25 நவம்பர் 2023, 11:27 am IST


இங்கிலாந்தில் வசிக்கும் 13 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஸ்வீடனில் நடைபெற்ற ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தின் கென்ட்டில் உள்ள செவெனோக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் ஷர்மா, இந்தியாவின் மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தனது தந்தை தினமும் யோகா செய்வதைப் பார்த்து மூன்று வயதாக இருந்தபோது யோகா பயிற்சி செய்யத் தொடங்கினார். அதனையடுத்து பல உலக யோகா சாம்பியன்ஷிப்களை வென்றார்.

முன்னதாக, கடந்த வார இறுதியில், மல்மோவில் உள்ள ஸ்வீடிஷ் யோகா விளையாட்டுக் கூட்டமைப்புடன் இணைந்து சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஐரோப்பிய போட்டியில் பங்கேற்ற ஈஸ்வர் ஷர்மா ​​2023-ஆம் ஆண்டுக்கான 12-14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கோப்பை வென்றார்.

கரோனா பெருந்தொற்று முடக்கத்தின்போது 14 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தினசரி யோகா வகுப்புகளை வழிநடத்திய சர்மா, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனால் ‘பாயிண்ட்ஸ் ஆஃப் லைட்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

யோகாவில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் ஐந்து உலக சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் சிட்டிசன் யூத் விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.