புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கால்பந்து வீரர்களின் ரெட் கார்ட்: இத்தாலியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

இத்தாலி கால்பந்தாட்ட வீரர்களும் பயிற்சியாளர்களும் முகத்தில் சிவப்பு குறியிட்டுள்ளனர். 

News image
ஏசி மிலன் கால்பந்தாட்ட கழகத்தைச் சேர்ந்த வீரர்
Updated On :26 நவம்பர் 2023, 5:23 am

DIN

இத்தாலி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்களின் மீதான வன்முறைகள் தொடர்பான விவகாரத்தில் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் முகங்களில் சிவப்பு குறியிட்டுள்ளனர்.

நவ.25 (சனிக்கிழமை) பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினத்தையொட்டியும், 22 வயதான பல்கலைக்கழக மாணவி அவரது காதலரால் கொல்லப்பட்ட சம்பத்தையொட்டியும் நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வெனிஸ் பகுதியைச் சேர்ந்த கியூலியா செச்சடின், அவரது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டார். ஒரு வாரம் முன்னதாக காதலருடன் வெளியே சென்ற கியூலியா மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது உடல் பல காயங்களோடு ஏரிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரைக் கொலை செய்த முன்னாள் காதலரை ஜெர்மனியில் கைது செய்துள்ளனர்.  

இத்தாலியில் சராசரியாக மூன்று நாள்களுக்கு ஒரு பெண் கொல்லப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றங்களில் பெரும்பாலும் பெண்களின் கணவர்கள், காதலர்களே காரணமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே நடக்கும் சீரி ஏ லீக் தொடரில் விளையாட்டு வீரர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

முகத்தில் சிவப்பு குறியிடுவதை ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை போட்டிகளிகளிலும் தொடரவுள்ளனர். இந்த முன்னெடுப்பு, வன்முறைக்கு எதிரான ரெட் கார்ட் என குறிப்பிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.