மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போர் நிறுத்தம் நீட்டிப்பு : 33 கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!

தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 33 கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :28 நவம்பர் 2023, 6:08 am

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தின் முதல் நாளான இன்று 33 பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

முதல்கட்டப் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான கடந்த திங்கள் கிழமை இரவு, 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட 11 பிணைக்கைதிகளும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போர்நிறுத்தத்தின் முதல் நாளான இன்று அதிகாலை, 11 பிணைக்கைதிகளுக்கு இணையாக 33 பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்து மேற்கு கடற்கரைப் பகுதிக்கு கொண்டு சென்றது இஸ்ரேல். 

இதையும் படிக்க: அமெரிக்கா:இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்துவை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளா்கள்

இந்தப்போர் நிறுத்தத்தின் மூலம் காஸாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மருந்துப்பொருள்கள், எரிபொருள்கள் ஆகியவை தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தாலும், நிவாரணப்பொருள்களில் தட்டுப்பாடு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 200 லாரிகள் வீதம் இரண்டு மாதங்களுக்கு நிவாரண உதவிகள் காஸாவிற்கு அனுப்பப்பட வேண்டும் என ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.