எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அமெரிக்காவின் முதல் மகளிர் கல்லூரியிலேயே ஆண்களுக்கு அதிக ஊதியம்!

தற்போது இருபாலரும் பயிலும் கல்லூரியாக இருக்கும் வாஸ்ஸர், ஊதியத்தில் பாலின வேறுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2023, 12:18 pm

DIN


அமெரிக்காவில் தற்போது இருபாலரும் பயிலும் கல்லூரியாக இருக்கும் வாஸ்ஸர், ஊதியத்தில் பாலின வேறுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, கல்லூரியின் முன்னாள் பேராசிரியைகள் சிலர், நீதிமன்றத்தை நாடியுள்ளார். கல்லூரியிலும் போராட்டம் நடந்துள்ளது.

வாஸ்ஸர் கல்லூரி, அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையை பெற்றது, பெண்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கல்வியில் இரு பாலருக்குமான சமநிலையை அதிகரிக்கச் செய்ய பேருதவி புரிந்துள்ளது.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகளைக் காட்டிலும் பேராசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கடந்த மாதம், ஐந்து பேராசிரியைகள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஊதிய பேதத்தைத் தாண்டி, பெண் பேராசிரியைகளுக்கு பதவி உயர்வை தாமதிப்பது, திறமையை மதிப்பிடுவது என பலவற்றிலும் பாலின வேறுபாடு பார்க்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம், கல்லூரியில் பேராசிரியைகளுக்கும் ஒரே ஊதியம் வழங்குமாறு நூற்றுக்கணக்கான மாணவர்கள் குரல் எழுப்பினர். பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான கல்லூரி என்பது, கலாசாரம், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்திலும் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பல்வேறு தரப்பு மாணவர்களும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். வாஸ்ஸர் கல்லூரியால் தாங்கள் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.

1969ஆம் ஆண்டு ஆண்டு முதல் இரு பாலினரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்ட வாஸ்ஸர், இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக பல விளக்கங்களை அளித்துள்ளது. கல்லூரி நிர்வாகமானது, தொடர்ந்து மற்றும் விடாமல், ஊதியம் வழங்குவதில் பாலின வேறுபாட்டைக் களைய தொடர்ந்து பாடுபாட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.