மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மனிதனுக்கு பன்றியின் இதயத்தைப் பொருத்தி சாதனை! இது இரண்டாவது முறை...

இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மனிதனுக்கு பன்றியின் இதயத்தைப் பொருத்தி சாதனை படைத்திருக்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள்.  

News image
Updated On :25 செப்டம்பர் 2023, 12:56 pm

DIN

இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மனிதனுக்கு பன்றியின் இதயத்தைப் பொருத்தி சாதனை படைத்திருக்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். 

உலகம் முழுவதும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் உறுப்புகள் செயலிழப்பு என்பது அதிகரித்து வருகிறது. இதனால் விலங்குகளின் உறுப்புகளை குறிப்பாக பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் இரண்டாவது முறையாக, பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி வெற்றி கண்டுள்ளனர். 

58 வயதுள்ள கடற்படை முன்னாள் அதிகாரி லாரன்ஸ் பாசெட், இதய செயலிழப்பு காரணமாக இறக்கும் தருவாயில் இருந்தார். பன்றியின் இதயத்தைப் பொருத்துவதற்கு அவர் சம்மதித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

அதன்படி, மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை லாரன்ஸுக்கு பொருத்தியுள்ளனர். தற்போது நாற்காலியில் எழுந்து உட்கார்ந்து மற்றவர்களுடன் சகஜமாக பேசும் அளவுக்கு லாரன்ஸின் உடல்நலம் முன்னேறியுள்ளது. 

பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்துவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு இதே மேரிலாண்ட் மருத்துவர்கள், டேவிட் பென்னெட் என்பவருக்கு பன்றியின் இதயத்தை முதல்முறையாகப் பொருத்தி அவர் இரண்டு மாதங்கள் வாழ்ந்துள்ளார். 

முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை குறித்து அறிந்த லாரன்ஸ் பாசெட், 'இந்த ஒரு நிலையில் யாருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்காது. ஆனால் எனக்கு இதில் நம்பிக்கை உள்ளது, எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது' என்று அறுவை சிகிச்சைக்கு முன்னதாக கூறியுள்ளார். 

இதேபோன்று சமீபமாக அமெரிக்காவின் நியுயார்க் பல்கலைக்கழக மருத்துவர்கள், மூளைச் சாவுற்ற ஒருவரின் உடலில் இரண்டு மாதங்கள் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, அது இயல்பாகச் செயல்படுவதை, வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளனர்.

உறுப்பு தானம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், உறுப்புகள் செயலிழப்பு அதிகரித்து வருவதால் இறப்புகள் அதிகமாகவே நிகழ்கின்றன. பல நூற்றாண்டுகளாக விலங்குகளில் இருந்து மனிதனுக்கு செய்யும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தோல்வியைக் கண்டு வந்த நிலையில், மருத்துவர்களின் இந்த முயற்சி, மருத்துவத் துறைக்கு முன்னேற்றமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.