சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சீனா: சியானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி; 6 பேரை காணவில்லை

சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியில் பெய்த கனமழைக்கு, வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியாகினர், 6 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :14 ஆகஸ்ட் 2023, 4:41 am

DIN

பெய்ஜிங்: சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியில் பெய்த கனமழைக்கு, வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியாகினர், 6 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் சில பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் கோடையிலும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன, ஆனால் இந்த ஆண்டு சில பகுதிகள் வழக்கத்திற்கு மாறாக கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது, மற்ற பகுதிகள் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியானின் புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் பெய்த கனமழைக்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போனவர்களைக் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில், கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அருகில் உள்ள சாலைகள், பாலங்கள், மின்விநியோகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

ஷான்சியில் உள்ள ஆயுதமேந்திய போலீஸ் படை பாதிக்கப்பட்ட பகுதிக்கு 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்பியது. பாதிக்கப்பட்ட பகுதியில் முதற்கட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உள்ளூர் தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் அவசரகால மேலாண்மை அதிகாரிகள் மீட்புப் பணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.