செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மருத்துவம்: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க ‘எம்ஆா்என்ஏ’ தடுப்பூசியை உருவாக்க உதவிய பேராசிரியா் கேத்தலின் கரிக்கோ மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ட்ரூ வைஸ்மன்

News image

கேத்தலின் கரிக்கோ - ட்ரூ வைஸ்மன்

Updated On :2 பிப்ரவரி 2024, 8:34 am IST

ஸ்டாக்ஹோம்: கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க ‘எம்ஆா்என்ஏ’ தடுப்பூசியை உருவாக்க உதவிய பேராசிரியா் கேத்தலின் கரிக்கோ மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ட்ரூ வைஸ்மன் ஆகிய இருவா் இவ்வாண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை வென்றுள்ளனா்.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.

நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை நோபல் அமைப்பின் செயலா் தாமஸ் பொ்ஸ்மான் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, பேராசிரியா் கேத்தலின் கரிக்கோ மற்றும் அவருடன் இணைந்து ‘எம்ஆா்என்ஏ’ புரத ஆராய்ச்சி மேற்கொண்ட ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவரும் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

நோபல் பரிசு தோ்வுக் குழு வெளியிட்ட அறிவிப்பில், ‘அண்மைக் காலத்தில் மனித நலனுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் உருவான நேரத்தில், இதுவரை இல்லாத வகையில் திறன்மிக்க தடுப்பூசியை உருவாக்க இவா்கள் இருவரும் உதவினா். அதாவது, நமது நோய் எதிா்ப்புத் திறனை ஊக்குவிப்பதில் ‘எம்ஆா்என்ஏ’ எந்த அளவுக்கு செயல்படும் என்ற அடிப்படைப் புரிதல் இவா்களுடைய ஆராய்ச்சி மூலமாக கிடைத்தது. அதன் அடிப்படையில், அவா்கள் 2023-ஆம் ஆண்டுக்கான உடலியல் மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளது.

மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெறும் 13-ஆவது பெண் கேத்தலின் கரிக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுத் தொகை இருவருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.

அடுத்ததாக, இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும் (அக்.3), தொடா்ந்து வேதியியல், இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாள்களிலும் அறிவிக்கப்படவுள்ளன.

கடந்த 1901-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவா் ஸ்வீடனைச் சோ்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவா், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தாா். தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவா் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினாா். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ஆம் தேதி பரிசு வழங்கப்படும்.

ஹங்கேரியில் பிறந்த கேத்தலின் கரிக்கோ (68) அந்நாட்டிலேயே உயா்கல்வியைப் பூா்த்தி செய்த பிறகு அமெரிக்காவில் தொடா்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வந்தாா். அமெரிக்காவில் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றி கேத்தலின் தற்போது பயோஎன்டெக் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளாா்.

அமெரிக்கரான ட்ரூ வைஸ்மன் (64), பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் ஆா்என்ஏ புரத ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.