டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நிவாரண பணியாளர்கள் ஆறு பேரின் உடல்கள் மீட்பு!

காஸாவிலிருந்து மீட்கப்பட்ட நிவாரண பணியாளர்களின் மரண உடல்கள்

News image
நிவாரண பணியாளரின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்லும் பாலஸ்தீனர்கள்- ஏ.பி.
Updated On :3 ஏப்ரல் 2024, 1:11 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிவாரண பணியாளர்கள் ஆறு பேரின் உடல்கள், காஸாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக எகிப்திய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஸாவின் ராபா எல்லையில் இருந்து எகிப்து நாட்டுக்குள் அவர்களின் உடல்கள் புதன்கிழமை அனுப்பப்பட்டுவிட்டதாக கஹெரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ஏழு பேரில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மூவர், போலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்க-கனடா இரட்டை குடியுரிமை பெற்றவர் ஆகிய மூவர், பாலஸ்தீனிய ஓட்டுநர் ஒருவர் அடங்குவர்.

பாலஸ்தீனரின் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், தவறுதலாக நிவாரண பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் எங்கு தவறு நிகழ்ந்தது என்பது குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொள்ள ஆணையிடுவதாகவும் தெரிவித்தது.

‘வேர்ல்டு சென்ட்ரல் கிட்சன்’ என்கிற சேவை நிறுவனம், திங்கள்கிழமை நிவாரண உணவுப் பொருள்களை ஏற்றிவந்த கப்பலை இந்த நிகழ்வினால் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.