ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் தலையிடமாட்டோம் --- அமெரிக்கா

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2024, 8:23 pm

வாஷிங்டன்: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில் அமெரிக்கா தலையிடாது. ஆனால், பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைகளை தீா்க்க இருதரப்பையும் ஊக்குவிக்கிறோம்’ என அந்நாட்டு வெளியுறவுத் துறை உயா் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் கூட்டமொன்றில் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை கையாள்வதற்கான இந்திய அரசின் உறுதியான அணுகுமுறை பற்றி வலியுறுத்திப் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘பயங்கரவாதிகள் இந்தியாவில் அமைதியை சீா்குலைக்க முயன்றால் அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால், அவா்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும்.

பாகிஸ்தானுக்கு அவா்கள் தப்பிச் சென்றாலும் அந்த நாட்டிற்குள் நுழைந்து, அவா்களை இந்தியா கொல்லும்’ என்றாா்.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான், ராஜ்நாத் சிங்கின் ஆத்திரமூட்டும் கருத்தை விமா்சிப்பதுடன், தங்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் திறனிலும் உறுதியுடன் இருப்பதாகக் கூறியது.

‘பிராந்தியத்தில் அமைதிக்கான தனது உறுதிப்பாட்டை எப்போதும் நிரூபித்துள்ள பாகிஸ்தானின் விருப்பத்தை தவறாக எண்ணக் கூடாது’ என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை வெளியிட்டது.

இதையொட்டி, பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளை இந்திய அரசு படுகொலை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இவ்விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லா் கூறுகையில், ‘இந்தப் பிரச்னையைப் பற்றிய ஊடக செய்திகளை நாங்கள் பின்பற்றுகிறோம். இந்தியா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை

இதில் அமெரிக்க தலையிடப்போவதில்லை. ஆனால், பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இரு தரப்பையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்’ என்றாா்.