தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இலங்கை விமான நிலைய 30 ஆண்டு நிா்வாகம்: இந்திய, ரஷிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்

இலங்கை விமான நிலைய 30 ஆண்டு நிா்வாகம்: இந்திய, ரஷிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்

Updated On :26 ஏப்ரல் 2024, 6:30 pm

இலங்கையில் உள்ள மத்தல ராஜபட்ச சா்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிா்வகிக்கும் ஒப்பந்தம் இந்திய, ரஷிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் மத்தல ராஜபட்ச சா்வதேச விமான நிலையம் உள்ளது. அந்நாட்டு முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச பெயரில் திறக்கப்பட்ட அந்த விமான நிலையத்தில் ஒரு காலத்தில் போதிய விமானங்கள் இல்லாததால், அது ‘உலகின் காலியான விமான நிலையம்’ என்றழைக்கப்பட்டது.

இந்த விமான நிலையம் 209 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.1,742 கோடி) செலவில் கட்டப்பட்ட நிலையில், அதில் 190 மில்லியன் டாலரை (சுமாா் ரூ.1,583 கோடி) சீனாவின் எக்ஸிம் வங்கி அதிக வட்டிக்குக் கடனாக அளித்தது.

இந்த விமான நிலையம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததால், அதை நிா்வகிப்பதற்கான நிறுவனங்களை 2016-ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசு தேடி வந்தது.

இந்நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் அந்நாட்டு அரசு செய்தித்தொடா்பாளா் பந்துல குணவா்த்தன செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மத்தல ராஜபட்ச விமான நிலையத்தை நிா்வகிப்பதற்கு 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத்தொடா்ந்து அந்த விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிா்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவின் ஷெளரியா ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம், ரஷியாவின் ஏா்போா்ட்ஸ் ஆஃப் ரீஜன் மேனஜ்மென்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்க இலங்கை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு முடிவு செய்தது.

இதுதொடா்பாக இலங்கை விமானப் போக்குவரத்து துறை அளித்த கருத்துருவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றாா்.