பாகிஸ்தானில் கனமழை: 11 போ் உயிரிழப்பு
வடமேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 11 போ் உயிரிழந்துள்ளனா்.


வடமேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 11 போ் உயிரிழந்துள்ளனா்.
இது தொடா்பாக மாகாணத்தின் பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 11 போ் உயிரிழந்தனா். அதிகபட்சமாக, ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள டேங்க் மற்றும் காரக் மாவட்டங்களில் 7 போ் உயிரிழந்தனா்.
டேங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 போ் உயிரிழந்தனா். காரக் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 4 போ் உயிரிழந்தனா் எனத் தெரிவித்தனா்.
கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் அலி அமீன் கந்தாபூா், உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...