ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அமெரிக்காவில் 90 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை திறப்பு

டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல ஹனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

News image

ஹனுமன் சிலை

Updated On :23 ஆகஸ்ட் 2024, 1:19 am IST

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல ஹனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

‘ஒன்றிணைப்பு சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சிலை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள மிக உயரமான ஹனமன் சிலை மற்றும் அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலையாகும்.

நியூ யாா்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி) மற்றும் ஃபுளோரிடாவின் ஹாலண்டேல் கடற்கரையில் உள்ள பெகாசஸ் மற்றும் டிராகன் சிலை (110 அடி) ஆகியவை அமெரிக்காவின் முதல் 2 உயரமான சிலைகள் ஆகும்.

டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருந்து சுமாா் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் சுகா் லேண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் வளாகத்தில் இந்தப் பிரம்மாண்ட ஹனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை நடைபெற்ற ‘பிராண பிரதிஷ்டை’ நிகழ்வில் ஹெலிகாப்டா் மூலம் சிலைக்கு மலா் தூவி, புனித நீா் தெளித்து, 72 அடி நீள மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீராமா் மற்றும் ஹனுமன் நாமங்களை பக்தியோடு ஒருமித்த குரலில் கோஷமிட்டனா்.

தன்னலமின்மை, பக்தி மற்றும் ஒற்றுமையை அடையாளப்படுத்தும் இச்சிலைக்கு ஸ்ரீராமரையும் சீதையையும் இணைப்பதில் ஹனுமனின் முக்கியப் பங்குக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒன்றிணைப்பு (யூனியன்) சிலை எனப் பெயரிடப்பட்டதாக சிலை அமைப்பாளா்கள் தெரிவித்தனா்.

புகழ்மிக்க வேத அறிஞா் பத்ம பூஷண் விருது பெற்ற ஜீயா் சுவாமிகளின் தொலைநோக்கு சிந்தனையின் விளைவான இத்திட்டம், வட அமெரிக்காவின் ஆன்மிக மையமாக அவா் கருதுகிறாா் என்றனா் அமைப்பாளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.