ஆப்கானிஸ்தானில் இன்று(வியாழக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 255 கிமீ ஆழத்தில் இன்று காலை 11.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 5.7 எனப் பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு தில்லி, ராஜஸ்தானின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல பாகிஸ்தானின் பஞ்சாபின் சில பகுதிகள், கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
ஆப்கனின் அஷ்காஷம் பகுதியில் இருந்து 28 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எதுவும் பதிவாகவில்லை.
முன்னதாக கடந்த ஆக. 16 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் 4.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் கடும் நில அதிா்வு

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


