நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

1000 வீடுகளின் பூட்டுகளை உடைத்து பிடிபட்டவர் சொன்ன விசித்திர காரணம்!

ஜப்பானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பூட்டுகளை உடைத்து நுழைந்த நபர் பிடிபட்டதும் சொன்ன விசித்திர காரணம்...

News image

கோப்புப் படம்

Updated On :3 டிசம்பர் 2024, 12:38 pm

ஜப்பானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பூட்டுகளை உடைத்து நுழைந்த நபர் காவல்துறையினரிடம் பிடிபட்டதும் விசித்திரமான காரணத்தைச் சொல்லியுள்ளார்.

தெற்கு ஜப்பானில் தசாய்ஃபூ பகுதியில் கடந்த நவ. 25 அன்று வீடு ஒன்றின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை, அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தார்.

37 வயதான அந்த நபரை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது வீட்டிற்குள் நுழைந்ததற்கு ஒரு விசித்திரமான காரணத்தை அந்த நபர் சொல்லியுள்ளார்.

விசாரணையில் அந்த நபர் கூறியதாவது, ”நான் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளேன். மற்றவர்களின் வீடுகளுக்குள் அப்படி நுழைவது என்னுடைய பொழுதுபோக்கு.

அப்படி நுழையும்போது யாராவது என்னைப் பார்த்து விடுவார்களோ என்று பயமாக இருக்கும். என்னுடைய உள்ளங்கைகள் அப்போது அதிகமாக வேர்க்கும். இது எனக்கு திகிலான அனுபவமாகவும் என்னுடைய மன அழுத்ததைப் போக்குவதாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

வீடுகளுக்குள் நுழைந்து இதுவரை அவர் திருடிய பொருள்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் இதுவரை எந்தப் பொருளையும் திருடியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரும் அவர் இவ்வாறு நுழைந்த வீடுகளில் இருந்து பொருள்கள் திருடு போனதாக எந்தப் புகாரும் வரவில்லை என்று கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.