ஜப்பானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பூட்டுகளை உடைத்து நுழைந்த நபர் காவல்துறையினரிடம் பிடிபட்டதும் விசித்திரமான காரணத்தைச் சொல்லியுள்ளார்.
தெற்கு ஜப்பானில் தசாய்ஃபூ பகுதியில் கடந்த நவ. 25 அன்று வீடு ஒன்றின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை, அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தார்.
37 வயதான அந்த நபரை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது வீட்டிற்குள் நுழைந்ததற்கு ஒரு விசித்திரமான காரணத்தை அந்த நபர் சொல்லியுள்ளார்.
விசாரணையில் அந்த நபர் கூறியதாவது, ”நான் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளேன். மற்றவர்களின் வீடுகளுக்குள் அப்படி நுழைவது என்னுடைய பொழுதுபோக்கு.
அப்படி நுழையும்போது யாராவது என்னைப் பார்த்து விடுவார்களோ என்று பயமாக இருக்கும். என்னுடைய உள்ளங்கைகள் அப்போது அதிகமாக வேர்க்கும். இது எனக்கு திகிலான அனுபவமாகவும் என்னுடைய மன அழுத்ததைப் போக்குவதாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
வீடுகளுக்குள் நுழைந்து இதுவரை அவர் திருடிய பொருள்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் இதுவரை எந்தப் பொருளையும் திருடியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரும் அவர் இவ்வாறு நுழைந்த வீடுகளில் இருந்து பொருள்கள் திருடு போனதாக எந்தப் புகாரும் வரவில்லை என்று கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படித்த ஒருவரை முதல்வர் ஆக்க வேண்டும்! Rajini மனதில் இருந்த அந்த நபர்!

டிஜிட்டல் கைது: முதியவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி!
பள்ளியில் பூட்டுகளை உடைத்து மடிக்கணினி, சாதனங்கள் திருட்டு

வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



