வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டாக்காவின் வடக்கே தோர் கிராமத்தில் மஹாபாக்ய லட்சுமிநாராயண் கோயில் உள்ளது. இக்கோயில் மீது வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து கோயிலில் உள்ள சிலைகளுக்கும் தீவைத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டு மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கோயிலின் மேற்பார்வையாளர் பாபுல் கோஷ் கூறியதாவது, லட்சுமிநாராயண் கோயில் எங்கள் குலதெய்வக் கோவில். நேற்று இரவு, வீட்டின் பின்புறம் புகுந்த மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி சிலைகளுக்கு தீ வைத்தனர்.
இதில் சிலைகள் எரிந்து சேதமடைந்தன. எங்கள் சப்தம் கேட்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
முன்புறம் சிசிடிவி இருப்பதை அறிந்த அவர்கள் பின்பக்கத்தில் இருந்து வந்துள்ளனர். இருப்பினும் சிசிடிவியில் எந்த காட்சியும் கிடைக்கவில்லை என்றார். இதனிடையே கோஷ் தனது கோயிலின் எரிந்த பகுதிகளைக் காட்டினார்.
வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் நகரில் 3 ஹிந்து கோயில்கள் மீது கடந்த நவம்பர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறிஞ்சிப்பாடி அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

கட்சிகனே கொஞ்சம் கவனியுங்கள்! வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீர்வு உண்டா?
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


