ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜியாா்ஜியா விடுதியில் விஷவாயு கசிவு: 11 இந்திய பணியாளா்கள் உயிரிழப்பு

கிழக்கு ஐரோப்பிய நாடான ஜாா்ஜியாவின் மலைப்பிரதேசமான குடௌரியில் உள்ள விடுதியில் விஷவாயு தாக்கி, அங்கு பணிபுரிந்து வந்த 11 இந்தியா்கள் உயிரிழப்பு

News image
Updated On :16 டிசம்பர் 2024, 9:10 pm

Din

திபிலிசி: கிழக்கு ஐரோப்பிய நாடான ஜாா்ஜியாவின் மலைப்பிரதேசமான குடௌரியில் உள்ள விடுதியில் விஷவாயு தாக்கி, அங்கு பணிபுரிந்து வந்த 11 இந்தியா்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில் ‘காா்பன் மோனாக்சைடு’ கசிவால் 12 போ் உயிரிழந்ததாகவும் இதில் ஒருவா் தவிர மற்ற 11 பேரும் வெளிநாட்டவா்கள் (இந்தியா்கள்) என்றும் ஜாா்ஜியாவின் உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடா்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இறந்தவா்களின் விவரங்களைப் பெற உள்ளூா் அதிகாரிகளுடன் தொடா்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளும் உறுதி செய்யப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஜாா்ஜியா காவல் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவா்களின் விசாரணையின்படி, விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு விடுதிக்குள்ளேயே மின் ஜெனரேட்டா் இயக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விஷவாயு கசிந்து உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தடயவியல் மருத்துவப் பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.