மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் வலியுறுத்தல்

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாடு வலியுறுத்தி உள்ளது.

News image
ஷேக் ஹசீனா
Updated On :24 டிசம்பர் 2024, 12:35 am

DIN

டாக்கா: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாடு வலியுறுத்தி உள்ளது.

இதுதொடா்பாக இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹூசைன் தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

இதைத்தொடா்ந்து அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்ற முகமது யூனுஸ், ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தொழிலாளா்கள் 1,500 போ் கொல்லப்பட்டதாகவும், 19,931 போ் காயமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இந்தக் குற்றத்துக்காக வங்கதேசத்தில் உள்நாட்டு குற்றங்களை விசாரிக்கும் சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம், ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில், அந்நாட்டுத் தலைநகா் டாக்காவில் வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹூசைன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘சட்ட நடவடிக்கைக்காக ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

வங்கதேச உள்துறை ஆலோசகா் ஜஹாங்கீா் ஆலம் கூறுகையில், ‘இந்தியா-வங்கதேசம் இடையே நாடு கடத்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹசீனாவை வங்கதேசத்துக்கு கொண்டுவர முடியும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.